பின்பற்றுபவர்கள்

சனி, 31 ஜனவரி, 2015

பிசாவில் பிரியாணி.


உலக அதிசயம்

இன்றைய காலகட்டத்தில் "துரித உணவு" எனும் தாற்பரியம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

எந்திரமயமான இந்த துரித வாழ்க்கை சூழலில் அடுப்பை மூட்டி,அரிசியை ஊறவைத்து , காய்கறிகளை வெட்டி, உப்பு மிளகாய்,புளி,வெங்காயம், தக்காளி....என்று ஒவ்வொன்றாக எடுத்து சமைத்து முடிப்பதற்குள் போதும் போதும்  என்றாகிவிடுகின்றது.

வியாழன், 29 ஜனவரி, 2015

தம்பிக்கு ஒரு பாட்டு.

" டார்லிங்" தம்பிக்கு 

தம்பி ஜி. வீ. பிரகாஷ் குமார் அவர்களுக்கு.

பொதுவாக மட்டுமல்ல குறிப்பாக கூட நான் திரை படங்களை பற்றியோ திரை நடிகர் நடிகைகளை பற்றியோ தொழில் நுட்ப்ப கலைஞர்களை பற்றியோ  விமர்சனம் செய்ய விரும்பாதவன், இதுவரை அப்படி எதுவும் செய்யாதவன்.

இப்போதுகூட, கொஞ்சம் அரை மனசோடுதான் இந்த பதிவை எழுதுகின்றேன்.

சமீபத்தில் திருட்டு வீ சி டி யில் அல்லாமல் இணைய தளத்தில் நீங்கள் இரண்டாவதாக நடித்து முதலில் வெளியிடப்பட்ட டார்லிங் திரைப்படத்தை பார்த்தேன்.

ஏறக்குறைய தமிழ் திரைப்படங்களை பார்க்க அவ்வளவாக வாய்ப்பும் வசதியும் இல்லாததால் படங்கள் பார்ப்பது கிடையாதது.

எனினும், நீங்கள் நடித்த திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆவல்  மிகுதியாலும் ஒரு சிலரின் கட்டாயத்தின் பேரிலும், இந்த திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது.

தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகள் நாங்கள் இருக்கும் பகுதியில் அதிகம் இல்லை.

சமயங்களில் சில படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்கள் அதுவும் ஒரு சில காட்சிகள் மட்டுமே திரை இடப்படும், எனவே அதற்காக நேரம் ஒதுக்கி போய் பார்க்கும் அவசியம் ஏற்பட்டதில்லை.

அதனால் உங்களின் இசை ஞானத்தின் பால் ஒரு மரியாதையும், ஈர்ப்பும் கொண்டிருக்கும் என்போன்ற ஒரு சில நபர்களின் உந்துதலின் பேரில் இந்த படத்தை பார்க்க விரும்பினேன்.

தம்பி, நீங்கள் நன்றாக இசை அமைக்கின்றீர்கள், இந்த சின்ன வயதிலேயே உங்களிடம் அபாரமான இசை அறிவும் ஞானமும் இருக்கின்றது.

இந்த படத்திலும் அது தெள்ளிய நீரோடைபோல தெள்ள தெளிவாக தெரிகின்றது.  

மிகவும் ரசித்தோம் உங்கள் , பாடல்களை, பின்னணி இசையை.

உங்கள் நடிப்பு என்று நான் எதை சொல்வது என்றே தெரியவில்லை.

G.V. Prakash Kumar

அப்பாவியாக அல்லது சோகமாக முகத்தை வைத்திருப்பதுதான் நடிப்பு என்றால் அந்த வேலையை செய்த உங்கள் சவரம் செய்யாத அந்த தாடிக்குதான் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

முதல் படத்தில் நடித்த எத்தனையோபேர்களின் படங்களை நான் பல காலங்களுக்கு முன் பார்த்து வியந்திருக்கின்றேன், திரைப்பட வாசனையே இல்லாத எத்தனையோ புதுமுக நடிகர்கள் என்னாமா நடித்து எம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

நீங்கள் அந்த படத்தில் வருகின்றீர்கள், சில சமயம் ஓடுகின்றீர்கள்  என்பதை தவிர நடித்தீர்கள் என என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் இன்னும் கொஞ்சம் நல்ல பயிற்சி எடுத்து நடிக்க வந்திருக்கலாம்.

எல்லோரும் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது, அதே சமத்யத்தில் முதல் பட வாய்ப்பை நழுவ விடவும் மாட்டார்கள், தனித்து தெரியும் அளவிற்கு முயற்சி செய்வார்கள்.

இதில் உங்களுக்கு நடிக்க போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லையா அல்லது இயக்குனருக்கு உங்களை வேலை வாங்கவோ, உங்களின் திறமைகளை வெளிகொனரவோ திறமை இல்லாமல் போய்விட்டதா?

ஒரு சில புதிய நடிகர் நடிகையரின் பேட்டிகளோ நிகழ்ச்சிகளையோ தொலைகாட்ச்சிகளில் காண நேரும்போது அவர்கள் தங்களை எல்லாவிதங்களிலும் திரை துறைக்கு  தேவைப்படும் அனைத்து பயிற்சி களையும் செய்த பின்னரே திரை வாய்ப்பு தேடி வந்ததாகவும் சொல்வதை கேட்க்கும்  போது உள்ளம் மகிழ்கின்றது , அவர்களின் நடிப்பும் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.

உங்களின் நடிப்பு  இந்த டார்லிங் திரைப்படத்தில் எங்குமே காண முடியவில்லை.

நண்பர் கருணாவும் அவரோடு வரும் மற்ற வரும் நடிப்பில் மின்னுகின்றனர் என்று நான் சொன்னால் அது மிகை அல்ல.

உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.

 கொஞ்சம் ஆழ கால் பதியுங்கள் அதில், மற்றபடி உங்களின் நடிப்பு கொஞ்சமாவது(?) மெருகேற்றிய பிறகு நல்ல இயக்குனரிடம் பயிற்சி  பெற்று  அதன் பிறகு யோசித்து செய்யுங்கள்.

முதல் இம்ப்ரஷன் என்னை பொருத்தவரை நன்றாக அமையவில்லை என்றே தோன்றுகின்றது.

சிலர் சொல்லுவார்கள், அருமையாக நடித்திருக்கின்றீர்கள், இது முதல் படம் போலவே தெரியவில்லை ஏதொ இதற்க்கு முன் குறைத்தபட்சம் ஒரு பத்து படங்களிலாவது நடித்திருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கின்றீகள் என்று.  தயவு செய்து இந்த தேன்  தடவிய விஷ வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்.

உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.

இந்த படத்தில் நீங்கள் கொஞ்சம் கூட நடிக்கவே இல்லை - நடிக்கவே தெரியவில்லை என்னும் தகவலும் உண்மையும் ஒரு "பென்சிலால்" வரையப்பட்ட கோடுதான்  இனியும் நீங்கள் நடிப்பதாயிருந்தால் கொஞ்சம் பயிற்ச்சியும் கவனமும் சேர்த்து அத்தோடு கொஞ்சம்  கதைகளையும் தேர்வு செய்து  நடித்து நல்ல பெயர் எடுத்து இந்த பென்சிலின் கோட்டை அழிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆற்றல் மிக்க எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வாய்ப்புக்காக அலைந்துகொண்டு இருக்கும் இந்த நாட்களில் உங்களைபோன்றோர் அந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடிப்பதாக கருதுகின்றேன்.

உங்களால் முடியும் முயலுங்கள், பயிற்சியுடன்.

அடுத்து உங்கள் மெருகேறிய நடிப்பாற்றலோடு வெளிவரும் திரைப்படம் எந்தன் இந்த பதிவின் எண்ணிக்கையைபோல குறைந்த பட்ச்சம் 50 வாரங்களாவது அரங்கு நிறைந்த காட்சிகளாக உலகமெங்கிலும் இல்லாவிட்டாலும் தமிழகத்திலாவது வெற்றி நடைபோட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

உங்கள் மேல் எனக்கு எந்த தனிப்பட்டு  வெறுப்போ பகையோ கோபமோ இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்று நம்புகின்றேன்.

இவை முற்றிலும் என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. 

யாரையும் பார்த்து சூடு போட்டுக்கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.

வாழ்க நலமுடன்.

நலம் நாடும்,

கோ.



புதன், 28 ஜனவரி, 2015

கேடி பில்லா - கில்லாடி ரங்கா.

ஊனம் - ஒரு போர்வை- ஒரு பார்வை!!

இது ஏதோ திரை பட விமர்ச்சனமா?

அப்படி என்றால் கூட இது ரொம்ப தாமதமான விமர்ச்கானமா இருக்குமே.
அந்த படம் வந்து, வெந்து, ஓடி , ஆடி ஓய்ந்து போன பிறகு எதற்கு அதற்க்கு இப்போ விமர்சனம்.

குடியரசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

 வாழ்த்துக்கள்!

"பிறந்த நாள்.... இன்று பிறந்த நாள்....  நாம்
பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் 
மறந்த நாள்.....
ஹாப்பி பர்த்டே டூ யூ...."

வெள்ளி, 23 ஜனவரி, 2015

பார்ட்டி உஷார்!!



வரவு நல்வரவாகட்டும்!

நண்பர்களே,

பொதுவாக நமக்கு தெரிந்த யாரேனும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும், கணக்கு வழக்குகளில் கறாராகவும், பேரம் பேசுவதில் சாதுர்யமாகவும் , விஷயங்களை அணுகுவதில் சாமார்த்தியமாகவும், பிறரிடம் இருந்து ஏதேனும் உதவிகள் பெறும்போது நாசுக்காக நடந்துகொள்பவர்களை "உஷார் பார்ட்டி" என்று வர்ணிக்கபடுவதுண்டு.  

வியாழன், 22 ஜனவரி, 2015

என்னை தெரியுமா?

நான் யார்? நான் யார்? நீ(ங்கள்) யார்?

விழா காலங்களில்  முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் பெருமளவிற்கு வருவதும் அனுப்புவதுமாக  இருந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நவீன மயமாக்கல் என்றபேரில் சுருங்கி, ஈ மெயில், வாட்சப்,டெக்ஸ்ட்  என்று ஆகிவிட்டது.

புதன், 21 ஜனவரி, 2015

நடுவுல கொஞ்சம் (இந்த) பக்கமே காணோம்?


உள்ளேன் ஐயா!

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்களாக பதிவின் ஊடாய்  உங்களோடு படைப்புகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகின்றேன்.

அதே சமயத்தில் அதற்க்கான காரணத்தை அறிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்றும் நம்புகின்றேன்.

புதன், 14 ஜனவரி, 2015

பொங்கல் இங்கே மாடு எங்கே?

மாட்டுப்பொங்கல் 


பொங்கலுக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் மாட்டை பிடித்துகொண்டு (எந்த மாடு என்பவர்களுக்கு - பாபியும் அதன் பேபியும்  படியுங்கள்) ஆற்றுக்கு சென்று,பசுவின் மடி நனையும் அளவிற்கு தண்ணீரில் நிற்க வைத்து,

செவ்வாய், 13 ஜனவரி, 2015

நன்றி உழவனே!


படி அளப்பவன்

உழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.

கல்யாண பரிசு - மாலை கச்சேரி

கல்யாண பரிசு தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  இங்கே .. கல்யாண பரிசு


"இல்லங்க இங்கே தான் இருக்கும் பாருங்க  ஒரு தினத்தந்தி பேப்பரில்  சுற்றி அந்த சீல் ஸ்டிக்கர்  ஒட்டி  இருக்கும் பாருங்க"

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்!!

"உழவர் திருநாள் - பொங்கல்  நல் வாழ்த்துக்கள்".


தொழுதுண்டு பின்செல்லதக்க பழுதற்ற மேன்மைகொண்ட- உலோகோரின் உயிர் வேருக்கும் உணவளிக்கும் ,

கல்யாண பரிசு - காலை முகூர்த்தம்

கல்யாண பரிசு

பல வருடங்களுக்கு முன் இந்தியா முழுவதும் தமது செல்வாக்கை நிலை நிறுத்தி  எல்லோர்  வீடுகளிலும் குடிகொண்டிருந்த  தொலை காட்சி பெட்டிகளில் தலை சிறந்த  பெயர் பெற்ற ஒரு தொலைகாட்சிபெட்டியின் பெயர் இப்போது நம்மில் எத்தனை பேருக்கு நினை விருக்கிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

யானைக்கும் பிடிக்கும் இது!

நண்பர்களே,

சமீப காலமாக நாட்டில், இந்த பேச்சு ரொம்பவே  அடிபடுகின்றது.

என்ன பேச்சு?

சனி, 3 ஜனவரி, 2015

வெள்ளி, 2 ஜனவரி, 2015

கடவு சீட்டும் கலையான முகமும்.


நண்பர்களே,

சமீபத்தில், வங்கியில் ஒரு ஒப்பந்த பத்திரத்தில், வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பாக, கையொப்பமிட நேர்ந்தது.

வியாழன், 1 ஜனவரி, 2015

சாஷ்டாங்க நல் வணக்கம்.

நண்பர்களே,

புத்தாண்டின் துவக்கத்தில் நம்மில் பலரும் ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், குருதுவார்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு இந்த புத்தாண்டை துவக்குவது வழக்கம் -செய்திருப்பீர்கள்.