பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2016

புகைப்படம்!!

கொஞ்சம் சிரி(க்காதே) 


புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். 

வியாழன், 28 ஜூலை, 2016

பாவம் அந்த பச்சப்புள்ள.

டா- டா- பாய் பாய்!!

நண்பர்களே,

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும்  ஆண், பெண்,வயது,  மொழி, கல்வி, பொருளாதாரம், நாடு போன்ற எந்த பாகுபாடும்மின்றி பரவலாக சொல்லும் ஒரு வார்த்தை "டா-டா".

புதன், 27 ஜூலை, 2016

ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?

 எத்தனை ?
நண்பர்களே,

சில வருடங்களுக்கு முன்னால், மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய தனி நாடான, மால்டா எனும் ஐரோப்பிய  நாட்டிற்கு சென்றிருந்தேன், அதை பற்றி....

செவ்வாய், 26 ஜூலை, 2016

சங்கும் -நுங்கும்

கேட்கிறதா?
நண்பர்களே,

நாம் யாரிடமாவது ஏதாவது அல்லது முக்கியமானதாக நாம் கருதும் ஒரு செய்தியை சொல்லும்போது அதை அவர்கள் உன்னிப்பாக கேட்கவேண்டும் என்று நினைப்போம்.

திங்கள், 25 ஜூலை, 2016

விஜயகாந்த் சொல்றதும் சரிதானே.

வருவியா... வரமாட்டீயா ..

நண்பர்களே,

சமீபத்தில் வெளிவந்து மகிழ்ச்சியுடன்(யாருக்கு??) வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தினை குறித்து இதுவரை சுமார் 7 கோடி மக்கள்தங்களின் விமர்சனங்களை எழுதி குவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்அதிலிருந்து கொஞ்சம் விலகி எனது மலேசிய நண்பர் சொன்ன ஒரு கருத்தை   உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளும் வாஞ்சையே இந்த பதிவு.

வெள்ளி, 22 ஜூலை, 2016

மருந்து வச்சிட்டாங்கய்யா.

 நாட்டு மருந்து !!

நண்பர்களே,

சமீப காலம் வரை நண்பர்களாக திகழ்ந்த நம்மில் ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி ஏதேனும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் ஏற்பட்டு, அதனால் உறவில் விரிசல் ஏற்படுமாயின்  நம் மனம் படும் வேதனையை சொல்லி மாளாது.

வியாழன், 21 ஜூலை, 2016

கவுண்டமணி - வைரமுத்து

"அப்போ செந்தில்....? "
நண்பர்களே,

பல வருடங்களாக நம் தமிழ் மண்ணில் பல விதமான வழக்கு சொற்கள் புதிதாக உலாவந்துகொண்டிருக்கின்றன.

புதன், 20 ஜூலை, 2016

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.

கண்ணும் கருத்தும்.

நண்பர்களே,

"ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு" என்று பலரும் பலமுறை சொல்லியும் இருப்போம்  சொல்லவும் கேட்டிருப்போம்.

திங்கள், 18 ஜூலை, 2016

உலகே மா(சா)யம்!!

மெய்ப்பொருள் காண்பதரிது!!

நண்பர்களே,

பழைய காலத்து மனிதர்களுள்  பெரும்பான்மையானவர்கள், சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை  வரலாறுகளும், வழி வழியாக சொல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் மூலமும் நாம் அறிவோம்.  

வெள்ளி, 15 ஜூலை, 2016

வேண்டாம் விட்டுடுங்க.

ஆமா நீங்க நலமா?

நண்பர்களே,

சமீபத்தில் ஊரில் தங்கி இருந்த நாட்களில் மிக முக்கியமான வேலைகள் இருந்தபோது மட்டுமே வெளியில் சென்று வந்தேன் மற்றபடி வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி இருந்தேன்.

வியாழன், 14 ஜூலை, 2016

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ??

மகுடம் சூடு.!!

நண்பர்களே,

மனிதனின் வாழ்வோடு  நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டற  கலந்து மனித வாழ்வியலை வளம்பெற செய்வதில் கால்நடைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

பதிவும் - பதிலும்

கைமேல்  பலன்!!.

நண்பர்களே,

பதிவர்களும் பதிவரல்லாத பெரும்பான்மையானவர்களும், பெரும்பான்மையான நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி, "பதிவுகளால் என்ன பயன்?" என்பதே.

வெள்ளி, 8 ஜூலை, 2016

நேர் "கொன்ற" பார்வை.

"கை (துசெய்யும்) தொலைபேசிகள்"  
நண்பர்களே,

பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும்  மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகா.!!

மணக்குமா?  இனிக்குமா?

நண்பர்களே,

இது என்ன தலைப்பு?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.

சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.

என்ன சுவைத்துகூட விட்டீரா?

ஆமாங்க.

இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.

 இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.  மல்லிகா என்று.

(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம்  நண்பரின் தோட்டத்தில் இருந்து  கொண்டு கொடுக்கப்பட்டது.  

எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான்  ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.

மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.

ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.

அதன் விதையும்  மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு  அதிகம்.

ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம்.  ஆஹா.... என்னே சுவை.

வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ