பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2016

நேர் "கொன்ற" பார்வை.

"கை (துசெய்யும்) தொலைபேசிகள்"  
நண்பர்களே,

பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும்  மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகா.!!

மணக்குமா?  இனிக்குமா?

நண்பர்களே,

இது என்ன தலைப்பு?

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.

சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.

என்ன சுவைத்துகூட விட்டீரா?

ஆமாங்க.

இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.

 இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர்.  மல்லிகா என்று.

(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம்  நண்பரின் தோட்டத்தில் இருந்து  கொண்டு கொடுக்கப்பட்டது.  

எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான்  ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.

மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.

ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.

அதன் விதையும்  மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு  அதிகம்.

ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம்.  ஆஹா.... என்னே சுவை.

வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

வியாழன், 30 ஜூன், 2016

"Money தா" பிமானம்

நமக்கு என்ன ஆச்சி  ?? 


நண்பர்களே,

சமீபத்தில் சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த துணிகர கொலை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது என்று சொல்வதைவிட, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தை எப்படி பாதித்திருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

செவ்வாய், 28 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--4


 மௌன சம்பாஷணை!!.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--3

தான் வருவதற்குள் -  தன்னை காண்பதற்குள் கண்மூடிப்போன அம்மாவை மண்மூட காத்திருக்கும் கந்தக செய்தியால் பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்தவர் தன்னிலை மறந்தவராய், தன் தாயாரின் ஆன்மாவோடு மானசீகமாக தன் மனதிற்குள் பற்பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.

திங்கள், 27 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--3

"தலை மகனுக்கு தலைப்பு செய்தி"

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--2

காரில் சுமார் 2 மணி நேர பயணத்தின்போது, நாட்டின் வளர்ச்சி, சாலை பராமரிப்பு,  குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் நலன் பற்றிய விசாரிப்புகள், தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றன.

வெள்ளி, 24 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--2



இனிய பயணம்.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க.....அம்மா இங்கே வா! வா!!

விமான நிலையத்தில் தன் அம்மாவை நினைத்து கண்ணீரோடு இறைவனிடம் பிரார்த்திக்கொண்டிருந்தவரின் தொலைபேசி சிணுங்கிடும் அதிர்வலைகளால் தன் இயல்பிற்கு திரும்பியவருக்கு, தன் சகோதரியின் அழைப்பு.

புதன், 22 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!...



வேண்டாம் ... நான் வருகிறேன்.

நண்பர்களே,

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானவரும், என் நிழலாக விளங்குபவரும்  வெளி நாட்டில் வசித்துவருபவருமான ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில், அதாவது 30 நாட்களுக்கு முன்,  ஏற்பட்ட நிகழ்வு ஒன்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விழைகின்றேன்.